பிரச்சினைகளை இணக்கப்பாட்டில் தீர்க்க வேண்டும் – பிரதமர்

298 0

ranil_15இந்து சமுத்திர வலயத்தில் எழும் பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டுடன் தீர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இடம்பெறும் 2016 இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர வலய நாடுகளுக்காக நிர்வாக சட்டமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கிடையில் கல்வி, மனித வளம் என்பவற்றை ஏற்படுத்தி கொள்வதற்காக குறித்த மாநாட்டை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.