அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் பான் கீ மூன் மகிழ்ச்சி – ஜனாதிபதி

335 0

f29babb1b8a13dafbda7895b84719c34_XLஅரசாங்கம் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தம்முடன் மகிழ்ச்சியுடன் கருத்து பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டில் வறுமையற்ற நாடாக மாற்றுவதற்காக மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்களையும் அவர் ஊடக பிரதானிகளிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது வருட பூர்த்தி நிகழ்வின் பின்னர் தற்போதைய நிலவரங்களுக்கமைய கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.