புகையிரத சாரதிகளின் கலந்துரையாடல் வெற்றி

222 0

புகையிரத சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது. 

ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களின் சேவை காலத்தை நீடித்து தருமாறும், சீனாவில் தயாரிக்கப்பட்ட புகையிரதங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக, இன்று அதிகாலை பயணிக்கவிருந்த 7 புகையிர சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இன்று காலை புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒரு கோரிக்கைக்கு தீர்வு காண முடிந்ததாக லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கம் தெரிவித்தது.

Leave a comment