கூட்டமைப்பை சிதைக்க தேசிய கட்சிகள் முயற்சி – கோவிந்தம் கருணாகரம்

176 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழிப்பதற்கு இரண்டு தேசிய கட்சிகளும் தமிழ் மக்களுக்கு கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போரதீவுபற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் பங்கேற்று உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

கடந்த காலங்களில் தேசிய கட்சிகளின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தற்போது தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ச குழாமில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை பிரிப்பதற்கு கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையின் இராஜதந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment