இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசவும், சமஸ்டி முறை இடைக்கால அறிக்கையில் உள்ளதாக கூறிவருகிறார்கள் என்றும், அவ்வாறு சமஸ்டி இருந்தால் அரசமைப்பை உருவாக்கும் தனது நண்பரான ஜயம்பதி விக்ரமரட்ணவை கூற சொல்லுமாறும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சவால் விடுத்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தை இன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் திறந்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.