காலநிலையில் திடீர் மாற்றம்!! வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

251 0

திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கடல் சடுதியாக கொந்தளிக்கும் சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடற் பயணங்களில் ஈடுபடுவோரை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களிலும் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும், நாளையும் காலநிலையில், மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டின் வடக்கு பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமையும், காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment