அப்புறப்படுத்தப்படாத யானையின் உடல்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

276 0

வெல்லாவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட திக்கோடை 50 வீட்டுத் திட்டப்பகுதி வீதியில் யானை ஒன்று இறந்து 3 நாட்களாகிறது.ஆனால் இறந்து கிடக்கும் யானையினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த இடத்திலேயே இறந்த யானையின் உடல் கடந்த மூன்று நாட்களாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a comment