த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது!

196 0

உள்ளூராட்சி தேர்தல் குறித்த சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (19) இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

வவுனியா உக்கிளாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக பண்டாரிக்குளம் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் குறித்த இடத்திற்கு வந்த பொலிசார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளுடன் உக்குளாங்குளம் பகுதியினை சேர்ந்த ரொபின்சன் (வயது 48), விவேகனந்தன் (வயது 31) சந்திரபத்மன் அபிசேக் (வயது 20) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Leave a comment