வத்தளை, மாபோல பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையமொன்றில் இன்று காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயினால் குறித்த மதுபான விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிசர கடற்படையின் தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த மதுபான சாலை முற்றாக எறிந்து தீக்கிரையானமை குறிப்படத்தக்கதாகும்.