பஸ் – லொறி நேருக்கு நேர் மோதியதில் ஐவர் படுகாயம்!!!

312 0

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்ஹில் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை பகுதியை நோக்கிப் பயணித்த லொறியும், நுவரெலியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் மூவரும், லொறியில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் விபத்தில் லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கந்தப்பளை பொலிஸார் இவ்விபத்து  தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment