மொஹமட் சுலைமான் கொலை – முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.

363 0

murderபம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலையுடன் பலர் தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சந்தேகத்திற்குரியவர்கள் சில தினங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கொலை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிரேனட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுகளை கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி.சி.டி.வி காணெளிகளின் காட்சிகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் சுலைமான் பம்பலபிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து, கடந்த 21 ஆம் திகதி இரவு கடத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரது உடலம் மாவனெல்ல – ஹெம்மாதகம – ரூகுலகம பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.