தம்மிடம் குறை கூறிக்கொண்டவர்களே புதிய சக்தியொன்றை உருவாக்க ஒன்றிணைகின்றனர் – ஜனாதிபதி

277 0

09-e1436888118374-1024x648முன்னைய ஆட்சியில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக தம்மிடம் குறை கூறிக்கொண்டவர்களே தற்போது புதிய சக்தியொன்றை உருவாக்க ஒன்றிணைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயின் மெழுகு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி; தமது கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே தன்னை அர்ப்பணித்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.