ஸ்ரீ ல.மு.கா. இன் பிரதிப் பொருளாளர் அப்துல் ரஸாக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

225 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொருளாளருமான அப்துல் ரஸாக் (ஜவாத்) கட்சியில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இந்த அறிவித்தலை அவருக்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால் அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும், அத்துடன் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜனவரி 03 ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவரை இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர்,  மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

Leave a comment