உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 54 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவற்றில் தாக்குதல், காயம் ஏற்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் 7 காணப்படுவதாகவும், அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்பான 23 முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் பொருட்கள் விநியோகம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் ஏனையவற்றுள் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (05) தெரிவித்துள்ளார்.
இம்முறைப்பாடுகளின் கீழ் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.