அம்பலாங்கொட கடலில் முதலை

235 0

அம்பலாங்கொட, உஸ்முதுன்லெவ பிரதேச கடலுக்கு இன்று காலை முதல் முதலை ஒன்று வந்திருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஹிக்கடுவ வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அகுரல கலப்பில் இருந்து இந்த முதலை கடலுக்கு வந்திருப்பதாகவும், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதால் முதலையை பிடிப்பதில் சிரமம் நிலவுவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அத தெரண செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

கடல் பகுதியில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கூறியுள்ள வன ஜீவராசிகள் அதிகாரிகள் முதலையை விரைவில் பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

Leave a comment