அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு நாளை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, நாளை மறுதினம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடாத்துவது தொடர்பான சட்ட விதிகள் மற்றும் தேர்தலின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையிடப்படவுள்ளது.