வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதில் தடைகள் ஏற்படலாம் – தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு

257 0

நாளை (27) நாடு பூராகவும் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறையை முறைமைப்படுத்துவதாக அதிகாரிகள் பல தடவைகள் கூறினாலும், அதனை செயற்படுத்தாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையிடலில் இரண்டு வாரங்களில் தீர்வு பெற்றுத்தருவதாகக் கூறிய வாக்குறுதியும் தற்பொழுது மீறப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் கே.ஆர். வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை தீர்க்க அதிகாரிகள் தவறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதில் தடைகள் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment