இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இரத்தினபுரி – அம்பிலிப்பிட்டி வீதியின் பதுல்பான பிரதேசத்திலுள்ள கால்வாயில் வீழ்ந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 41 பேர் இரத்திபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

