அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தக விநியோகம் ஆரம்பம்

213 0

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் பத்மினி நாளிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.

இம்முறை தரம் மூன்றுக்கான பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தரம் ஒன்பதுக்கான பாடப் புத்தக விநியோகப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் பாடப் புத்தகங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவச பாடப் புத்தக விநியோகம் தொடர்பான தேசிய வைபவம் அடுத்த மாதம் 11ஆம் திகதி கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment