விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரத சேவை

791 0

புதுவருடம், நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7ம் திகதி வரை விசேட புகையிரத சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகையிரத சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி செயற்படும் என மேலதிக புகையிரத மேலாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இம்மாதம் 22, 24, 26 மற்றும் ஜனவரி 2, 4, 6, ஆகிய தினங்களில் காலை 7.03 இற்கு கொழும்பிலிருந்து செல்லும் குறித்த புகையிரதம் மாலை 5.39 இற்கு பதுளை சென்றடையவுள்ளதுடன் 23, 25,27,29 மற்றும் ஜனவரி 3, 5, 7, ஆகிய தினங்களில் பதுளையிலிருந்து காலை 7.15 இற்கு புறப்பட்டு மாலை 6.12 இற்கு கொழும்பை வந்தடையவுள்ளது.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க புகையிரத மேலாளர் மஹானாம அபேவிக்ரமவின் அறிவுரை படி குறித்த விஷேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment