தேர்தல் சட்டங்களை மீறிய நால்வர் கைது

1540 0

தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் பேரணி சென்றமை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட குறித்த நபர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வேட்புமனுத்தாக்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து குறித்த நபர்கள் வாகன பேரணி செல்லும் வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களின் முச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த வேளையில் பொலிஸ் அதிகாரியின் மேல் மோதி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment