நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் சண்.குகவரதன் மேயர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த குகவரதன், திட்டமிடல் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்தமுறை நடைபெற்ற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருந்தது.

