இலஞ்ச, ஊழல் சட்டத்தில் திருத்தம்

226 0

30 வருட காலம் பழைமை வாய்ந்த இலஞ்ச, ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க முனையும் நபர்களுக்கான வழிவகைகளை முற்றாக இல்லாது செய்வதே தமது நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

அத்துடன், சட்டத்தில் சேர்க்க வேண்டிய திருத்தங்கள் பற்றி கல்விமான்கள் ஊடாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள சரத் ஜயமான்ன, அடுத்த சில மாதங்களுக்குள் திருத்தங்களை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment