2018 ஆம் ஆண்டில் புதிய வகை கடவுச்சீட்டு

234 0

புதிய வகை கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துளார்.

குறித்த கடவுச்சீட்டினை சிவில் விமானசேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் குறித்த கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முடியும் எனவும் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் அமைச்சரவையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது புதிய கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் குறித்த அறிக்கை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment