எதிர்பார்த்ததற்கு முன்னரே மேம்பாலத்தை திறக்கப்போகும் அரசாங்கம்

371 0

தேசிய அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைய ராஜகிரிய மேம் பாலத்தின் பணிகள் 11 மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) குறித்த மேம்பாலத்தின் பணிகளைப் பார்வையிட அங்கு சென்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மேம்பால திட்டமானது அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நிறைவு செய்வதற்கு  எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அடுத்த வருடம் ஜனவரி மாதமே இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்க முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாகன நெரிசல் காரணமாக இன்று பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும்,அதனைத் தீர்ப்பதற்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த களணி பாலத்திலிருந்து கொழும்புக் கோட்டை வரை மேலுமொரு வீதியினை அமைக்கும் திட்டம் ஒன்று ​மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இது ராஜகிரிய சந்தியுடன் இணைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment