248 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் இன்று ஆரம்பம்

227 0

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் எஞ்­சி­யுள்ள 248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனுத்தாக்கல் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நண்­ப­க­லுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்­வ­தற்­கான அறி­வித்தல் கடந்த நான்காம் திகதி வெளி­ யான நிலையில்  உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 248 இற்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்யும் நட­வ­டிக்­கையே இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

குறித்த சபை­க­ளுக்­கான வேட்பு மனுத்­தாக்கல் செய்­யப்­பட்ட பின்­னரே தேர்தல் நடை­பெறும் தினம் பற்­றிய உத்­தி­யோ­க ­பூர்வ அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை  341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில்    93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. அதற்­கி­ணங்க குறித்த சபை­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­ப­மா­ன­துடன் 14 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வந்­தது.

இம்­முறை தேர்தல் ஊடாக  உள்­ளூ­ராட்சி  341  மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இறு­தி­யாக விகி­தா­சார முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் போது நாட்டில் முன்­னூற்று முப்­பத்­தைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் இருந்­த­துடன் அம்­மன்­றங்­க­ளுக்கு நான்­கா­யி­ரத்து நானூற்று எண்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டனர்.

ஆகவே புதிய தேர்தல் முறை­யூ­டாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கடந்த தேர்­த­லை­விட ஆறு உள்­ளூ­ராட்சி மன்றங்கள் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.  அகரபதன, கொட்டகல, மஸ்கெலிய, நோர்வூட், பொலநறுவை ஆகிய பிரதேச சபைளும் பொலநறுவை மாநாகர சபையுமே புதிய உள்ளூராட்சி மன்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a comment