மட்டக்களப்பில் 42 அடி உயர நத்தார் மரம்!

318 0

மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முன்தினம்(16)  மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குமக்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சியினால் மின்குமிழ்களின் மூலம் குறித்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பங்குத்தந்தை ரொசான் அடிகளாரால் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முழுதும் மின்குழிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த நத்தார் மரத்தினை பார்வையிட பெருமளவிலானோர் வருகைத் தருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a comment