கணவனிடமிருந்து மனைவியை பாதுகாக்க புதிய சட்டம்!

226 0

இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்குதல் தண்டனைக்குரிய குற்றமாக கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளன.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத் திருத்தம் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment