16 இந்திய மீனவர்கள் விடுதலை

234 0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறீய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கமையவே ஊர்காவற்றுறை நீதிமன்றால் குறித்த 16 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த இம் மீனவர்கள் அனைவரும் கடந்த 2017.08.31 மற்றும் 2017.09.12 ஆகிய திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment