விடுவிக்கப்பட்ட முகமாலையில் மக்கள் விரைவில் குடியேற்றம்

448 0

மிதிவெடிகள் அகற்றப்பட்ட கிளிநொச்சி – முகமாலை பகுதி, கடந்த 12ம் திகதி பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீளவும் அப் பகுதிகளுக்கு சென்று தமது காணிகளில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது தற்காலிக இடங்களில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மிதி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர்கள் வரையான நிலங்களில் அரசாங்கம் மீண்டும் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ், 38 குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக, பிரதேச செயலாளர் பி.ஜெயரானி குறிப்பிட்டுள்ளார்

Leave a comment