முல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா!

1894 0

300 கிலோவிற்கும்அதிகமானகேரளக்கஞ்சாவத்தளைஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும் கேரளக்கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு பலாமர சந்தி, தெமட்டகொட, வாழைத்தோட்டம், வத்தளை மற்றும் கந்தர ஆகிய பகுதிகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பல்வேறு வகைப்பட்ட 260 போதை வில்லைகளுடன் 42 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment