அரச நூலகமொன்றில் கொள்ளை

245 0

பண்டாரகம பிரதேச சபையினால் நடாத்தப்படும் பொது நூலகத்தின் அலுவலகத்திலிருந்து 73,000 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதவு, பூட்டுக்கள் உடைக்கப்படாத நிலையில் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அலுவலக நடவடிக்கைகளை நன்கறிந்த ஒருவரே இக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment