கொழும்பு பேராயர் – பொதுபல சேனா சந்திப்பு

342 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று, கொழும்பு ஆயர் இல்லத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. 

இதன்போது, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தடைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பகுதி நேர வகுப்புகளை நடத்துவதை எதிர்த்து பேராயர் வெளியிட்ட கருத்துக்கு, ஞானசார தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு இது குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல யோசனை, அரச சார்பற்ற நிறுவனங்கள் பணத்தை செலவிட்டு மேற்கொண்டு வரும் கருத்தடை வேலைத்திட்டங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விபரங்களை இச் சந்தர்ப்பத்தில் ஞானசார, பேராயரிடம் வழங்கியுள்ளார்.

மேலும், இங்கு கருத்து வெளியிட்ட பேராயர், சிங்கள பௌத்த அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை என தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே உட்பட பலர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a comment