மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

250 0

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீதொட்டமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட அனர்த்த வலயத்தின் வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த காணிகளின் உரிமையாளர்கள் 110 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான மதிப்பீட்டு பெறுமதியினை நட்டஈடாக செலுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment