மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 17ஆம் திகதி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இலங்கை வரவுள்ளதாக மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய மாநாட்டின் பங்கேற்பு நாடுகளில் மலேசிய தலைமைத்துவம் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே இவரது இவ்விஜயம் அமைந்துள்ளது. இவ்விஜயத்தின் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார்.