பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை

215 0

sபொலன்னறுவையில் சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கென தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலையான இதற்கு சீன அரசாங்கம் இதற்காக 120 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் உட்பட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

200 நோயாளர்களுக்கான கட்டில்களை கொண்டிருக்கும் இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் சேவை பிரிவும் அமையவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த ஜூன் மாதம் 06ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இலங்கை மற்றும் சீன பிரிதிநிதிகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment