கொழும்பு துறைமுக தீ – விசாரணைகள் ஆரம்பம்

317 0

lanka_8கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற தீப்பரவல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுக அதிகார சபை அதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இறங்குதுறை களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த ரபர் தொகுதியில் நேற்று தீப்பரவல் ஏற்படடது.

தீயணைப்பு படையினரும், துறைமுக தீயணைப்பு பிரிவும் இணைந்து அதனை கட்டுப்பாட்டுக்க கொண்டு வந்தன.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ரப்பர் குழாய் தொகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

குறித்த குழாய்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அருகில் இரும்பு பொருத்து வேலைகள் இடம்பெற்று வந்தமையாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.