அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு 10 ரூபாய் இலட்சம் இழப்பீடு

228 0

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு அரசின் மூலம் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் உயிரிழந்த 8 மீனவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கியதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, காலி உள்ளிட்ட அனர்த்தத்திற்கு உள்ளாகி இருக்கும் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு சரியான இழப்பீட்டு தொகை வழங்கும் வரை அவசர தேவைகளுக்காக 10,000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment