நீர்கொழும்பிலிருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் அடங்கிய குழுவொன்று கடந்த 29 ஆம் திகதி ஆழ் கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ‘செனுரி துவதருசி புதா’ என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீனவர்கள் நான்கு பேரே காணாமல் போயுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்கொழும்பிலிருந்து படகில் காணாமல் போயுள்ள மீனவர்கள் தொழிலுக்கு சென்றுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி முதல் படகுடன் இருந்த தொடர்பு நின்று போயுள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்ரிகோ (படகு ஓட்டுநர்) , குடாபாடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்ரிகோ, அஜித் குமார மற்றும் பலகத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்ரிகோ ஆகியோரே இந்த படகில் தொழிலுக்காக சென்றவர்களாவர்.