வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பெண் யாழ்ப்பாணத்தில் கைது

315 0

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம், கைய்ட்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து, இங்கு தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட பெண் இந்தியாவின் ராஜபுரம் பகுதியில் வசிக்கும் 47 வயதுடையவர் என அடையாளம்காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று கைய்ட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment