எமது நாடானது சிங்கள பௌத்த நாடு என்று அழைக்கப்படுவதை எவரும் எதிர்க்க முடியாது. இந்த நாட்டில் 74 சதவீதமான சிங்களவர்களாகவும் இவர்களில் 85 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகவும் உள்ளனர். இதுவே உண்மையான நிலைப்பாடாகும்.
இவ்வாறு மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சராக இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டின் மூலப் பெயர் சிங்கலே என்பதாகும். 1815ஆம் ஆண்டு பிரித்தானியத் தலைவர்களாலும் சிங்கலே தலைவர்களாலும் கண்டிய சாசனம் எழுதப்பட்டது. எமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சிங்கலே என்ற பெயரைத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டிலுள்ள அனைவரும் சிங்களவர்களாகவே இருந்திருப்பார்கள்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பல்லினங்களைக் கொண்ட நாடுகளாகவே உள்ளன. ஆனால் பொதுவாக நாடுகளில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் பெரும்பான்மை மதங்களை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த நாடுகள் அடையாளம் காணப்படுகின்றன.
எமது நாடானது சிங்கள பௌத்த நாடு என்று அழைக்கப்படுவதை எவரும் எதிர்க்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் 74 சதவீதமான சிங்களவர்களாவும் இவர்களில் 85 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகவும் உள்ளனர். இதுவே உண்மையான நிலைப்பாடா கும்.
சிங்களவர்கள் வடக்கில் குடியேறுவதை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். ஆனால் கொழும்பிலுள்ள சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடாகும்.
முஸ்லிம் நாடொன்றில் வாழும் முல்லாக் களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு துன்பப்படுத்தினால், அவரது தலை துண்டிக்கப்படும்.
இது சிங்கள பௌத்த நாடு என்பதை விக்னேஸ்வரன் அறிந்துள்ளதால்தான் அவர் தனது அதிருப்திகளை வெளியிட்டு வருகிறார்.பௌத்தர்கள் ஏனைய மதங்களை மதிக்கின்றனர்.
இதன் காரணமாகவே இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான கோயில் கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.
வெசாக் போயா தினத்தைப் பன்னாட்டு விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜெனிவாவில் வைத்து லக்ஸ்மன் கதிர்காமர் பரிந்துரை செய்திருந்தார். இதுவே உண்மையான நல்லிணக்கமாகக் காணப்பட்டது.
வனவளத்திணைக்களத்தின் பிடியில் கல்மடுப் பிரதேச மேய்ச்சல் நிலம் ஆனால் இன்று இந்த நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.