மத்திய வங்கிப் பிணைமுறிக் கொள்ளையர்களைத் தூக்கிலிட வேண்டுமெனப் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
கொழும்புப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட் டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படவேண்டும்.
ஊழல் மோசடி செய்யப்பட்ட பல கோடி ரூபா பணம் மீளவும் அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும். பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படு வதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கள்வர்களுக்குத் தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தே நல்லாட்சி அரசு ஆட்சி அமைத்தது.
நல்லாட்சி அரசிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் அது பாரதூரமான ஓர் நிலமையாகும்.பிணைமுறி மோசடிக் கொள்ளையர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அரச தலைவர் மைத்திரி மற்றும் தலைமை அமைச்சர் ரணில் ஆகியோரின் பொறுப்பாகும் – என்றார்.