மத்­திய வங்கிப் பிணைமுறிக் கொள்­ளை­யர்­களைத் தூக்­கி­லிட வேண்­டும்!

239 0

மத்­திய வங்கிப் பிணைமுறிக் கொள்­ளை­யர்­களைத் தூக்­கி­லிட வேண்­டு­மெனப் பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார்.

கொழும்புப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர் இத­னைக் குறிப்­பிட் டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மத்­திய வங்கிப் பிணைமுறி மோச­டி­க­ளில் ஈடு­பட்ட நபர்­கள் தரா­த­ரம் பாராது தண்­டிக்­கப்­படவேண்­டும்.

ஊழல் மோசடி செய்­யப்­பட்ட பல கோடி ரூபா பணம் மீள­வும் அர­சுக்­குச் செலுத்­தப்­பட வேண்­டும். பிணை முறி மோச­டி­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்குத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­ வதை மக்­கள் ஆவ­லு­டன் எதிர்பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர்.

கள்­வர்­க­ளுக்குத் தண்­டனை விதிப்­ப­தா­கத் தெரி­வித்தே நல்­லாட்சி அரசு ஆட்சி அமைத்­தது.

நல்­லாட்சி அர­சி­லும் இவ்­வா­றான மோச­டி­கள் இடம்­பெற்­றால் அது பார­தூ­ர­மான ஓர் நில­மை­யா­கும்.பிணைமுறி மோசடிக் கொள்­ளை­யர்­க­ளுக்குத் தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டி­யது அரச தலை­வர் மைத்­திரி மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் ஆகி­யோ­ரின் பொறுப்­பா­கும் – என்­றார்.

Leave a comment