தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மகிந்த அணி இணைந்து போட்டியிடுவது இறுதி வரை முன்னெடுக்கப்படும்!

304 0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மகிந்த அணி ஆகியன இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பிலும் எதிர்ப்பாளிகள் இருக்கின்ற போதிலும், ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்பதே சிரேஷ்ட உறுப்பினர்களின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment