தல புட்டுவாவின் தந்தங்களை வேட்டையாடிய ஐவர் கைது!

278 0

கல்கமுவ பிரதேசத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த “தல புட்டுவா” என்று அறியப்பட்ட யானையை கொலை செய்த சம்பவத்தில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பன்பொல பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி நேற்று இரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்த யானையின் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் ஹொரவ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a comment