தேர்தல் பெப்ரவரியில் !

6144 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்புக்கான அறிவிப்பு இம்மாதம் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Leave a comment