போக்குவரத்து தடையை சீர்செய்ய விசேட ஏற்பாடு

5396 0

கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் மரங்கள் முறிந்து வீழந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை மாநகர சபை மேற்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக 0777 313247 மற்றும் 110 என்ற தொலைபேசி இலக்கங்களை கொழும்பு மாநாகர சபை பொதுமக்களின் நன்மைகருதி வெளியிட்டுள்ளது.

Leave a comment