நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

4304 0

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சீரற்றக் காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் 20000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், 1000 பேர் வரையிலேயே பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்றக் காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரையில் 7 பேர் மரணித்துள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தமாக 4 ஆயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a comment