கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது.
மாவீரர்களின் பெற்றோhர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர், பிராதான பொதுச் சுடரை ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் ஏற்றி வைத்தனர்.
சுமார் ஜயாயிரம் வரையான பொது மக்கள் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார்.