சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவில் பங்கேற்க போவதில்லை – ரஞ்சித் சொய்சா

309 0

ranjith de zoysha44aஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா  தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எனினும் தாம் கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க தலைமையில் மினுவங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற அமைப்பாளர் கூட்டம் ஒன்றின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எதிராக தீரமானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.