தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வது – மகிந்த கேள்வி

320 0

mahinda-5ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளாத நிலையில் தாம் எவ்வாறு கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தியதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும் என்ற காரணத்திற்காக தாம் தேர்தலை நடத்தவில்லை.

அவ்வாறாயின் தாம் இரண்டாவது தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் மகிந்த  ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.